நண்பா்களே தமிழகத்தில் செய்தி நாளிதழ் துறையில் அதிக வாசகா்களை பிடித்த தினதந்தி நாளிதழ் நிறுவனத்தின் சார்பாக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட செய்திகள் தொலைக்காட்சியான தந்தி டிவி தமிழக செய்திகள் தொலைக்காட்சியில் வரலாற்றில் முதன்முறையாக ஆசிய
கண்டத்தில் உள்ள ஒரு நாட்டின் அதிபரை நேர்காணல் மேற்கொண்டுள்ளது.ஆம் தமிழகம் மற்றும் இலங்கை தமிழ் மக்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்ட இலங்கை நாட்டின் அதிபரான மஹிந்த ராஜபக்சே அவா்களுடன் நேரகாணலை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக செய்திகள் தொலைக்காட்சிகள் இத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செய்திகள் தொலைக்காட்சிகள் புதுவிதமான நிகழ்ச்சிகளை
வழங்கி வருவது தமிழகத்தில் மீடியா சுதந்திரத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது.இந்தியாவின் மற்ற மொழி தொலைக்காட்சிகளும் இத்தகைய பிரபலமான அரசியல் தலைவா்கள் மற்றும் பெரிய நிர்வனாத்தின் தொழில் அதிபா்கள் நோ்காணல் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது.தந்தி டிவியின் இத்தகைய புதிய முயற்ச்சியை நமது இந்திய மீடியா துறையின் சார்பாக வரவேற்ப்போம் வாழ்த்துவோம்.தொகுப்பு சதீஸ்சாட் தமிழ்